திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இரத்தம் புனிதப் பொருளாக அங்கீகரிக்கப்படும்
சன.18,2011: இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப் பேறு பெற்றவராக அறிவிக்கப்படும்
போது அவரின் இரத்தம் புனிதப் பொருளாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இரத்தம், அவருக்குச் செயலராக இருந்த கர்தினால் Stanislaw
Dziwisz க்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்டது.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின்
கடைசிக் காலங்களில் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட இந்த இரத்தம்,
போலந்தின் கிராக்கோவிலுள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் நிறுவன ஆலயப்பீடத்தில் வைக்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வருகிற மே ஒன்றாம்
தேதி வத்திக்கானில் முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படுவார்