2011-01-19 14:50:41

தாவோஸ் உலக பொருளாதாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சென்னைச் சிறுமி


சன.18,2011: சுவிட்சர்லாந்து நாட்டு தாவோசில் இம்மாதம் 26ம் தேதி நடைபெறவிருக்கின்ற WEF என்ற உலக பொருளாதாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்னையைச் சேர்ந்த 17 வயது சமூக ஆர்வலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டு தடவைகள் தேசிய விருதைப் பெற்றுள்ள அஞ்சலி சந்திரசேகர் என்ற 17 வயதுச் சிறுமி, உலகெங்கும் விண்ணப்பித்திருந்த 1500க்கும் மேற்பட்டோரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து இளையோரில் ஒருவர்.

அஞ்சலி, இந்த WEF கூட்டத்தில் கலந்து கொள்ளும் மிக இளம் வயது இந்தியராக இருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.