சன.18,2011: மஹராஷ்டிர மாநிலத்தின் Vidarbha பகுதியில் கடந்த 18 நாட்களில் 27 விவசாயிகள்
தற்கொலை செய்தனர் என்ற செய்தி கேட்டுத் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறினார் தலத்திருச்சபை
அதிகாரி ஒருவர்.
விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள் அதிர்ச்சி
தருவதாகவும் இதனைத் திருச்சபையும் சமுதாயமும் ஒரு முக்கியமான விவகாரமாக எடுத்துச் செயல்பட
வேண்டுமெனவும் Yavtmal மாவட்ட அருட்பணியாளர் Jolly Puthenpura கூறினார்.
அறுவடை
பெருமளவில் பொய்த்துப் போனதே இதற்கான காரணம் என்றுரைத்த அவர், இம்மாதத்தின் முதல் 18
நாட்களில் 27 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளது உண்மையிலேயே வருத்தத்துக்குரியது என்றார்.
ஒரு நாடு தன் மக்களைப் போஷிக்கும் விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறுவது அந்நாட்டின்
ஜனநாயகத்துக்கு இழுக்காக இருக்கின்றது என்றும் அக்குரு குறை கூறினார்