கியூப நாட்டிற்கான சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க ஆயர்கள் மகிழ்ச்சி.
சனவரி18,2011. கியூப நாட்டிற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது மற்றும் பொருளாதார
உதவிகள் அந்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தங்கள்
மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
1962ம் ஆண்டு முதல் கியூபாவிற்கு எதிராக இருந்து
வரும் சில கட்டுப்பாடுகளை தற்போதைய அரசுத்தலைவர் பாரக் ஒபாமா நீக்கியுள்ளது குறித்து
மகிழ்ச்சியை வெளியிட்ட அமெரிக்க ஆயர்கள், தற்போதைய கட்டுப்பாடு தளர்த்தல்கள் அதிகம் இல்லையெனினும்,
இது இரு நாடுகளுக்கு இடையேயான புது உறவுகளுக்கானத் துவக்கமாகவும் நம்பிக்கை தருவதாகவும்
உள்ளது என்றார் ஆயர் Howard Hubbard.
கியூப நாட்டிற்கான பயணங்கள் மீதான தேவையற்ற
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது மற்றும் தனியார் நிதி உதவிகளை ஓரளவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது
போன்றவைகள், கியூப மக்கள் மேலும் சுதந்திரத்தையும், மத விடுதலையையும், மனித உரிமைகளையும்
பெற உதவும் என்றார் ஆயர்.