காங்கோ ஜனநாயக குடியரசில் அருட்சகோதரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சனவரி 18, 2011. காங்கோ ஜனநாயக குடியரசில் ஏழை மக்களிடையே மருத்துவப்பணியாற்றி வந்த
அருட்சகோதரி ஒருவர் ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
காங்கோ
நாட்டு அருட்சகோதரி Jeanne Yemgane மக்களுக்கு சிகிச்சை செய்வதற்கென ஒரு வாகனத்தில்
பயணம் செய்துகொண்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின்
மரணம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் ரிச்சர்டு டோம்பா, அப்பாவி மக்களும்
துறவறத்தாரும் கூட ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்களுக்கு பலியாவது தொடர்வதாக உரைத்தார்.