2011-01-17 15:15:43

எத்தனையோ வேறுபாடுகள் காணப்படினும், அனைவரும் ஒரே குடும்பம் என்கிறார் திருத்தந்தை.


சன 17, 2011. இஞ்ஞாயிறு அன்று சிறப்பிக்கப்பட்ட உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் குறித்து ஞாயிறு மூவேளை செப உரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதர்களிடையே எத்தனையோ வேறுபாடுகள் காணப்படினும், அனைவரும் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்தினார்.
மேம்பட்ட ஒரு வாழ்வுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்களையும் குடும்பங்களையும் சிற்ப்பான விதத்தில் நினைவுகூர இந்தச் சிறப்பு நாள் அழைப்பு விடுக்கிறது என்ற பாப்பிறை, எந்த ஒரு தடைச்சுவரும் இடாமல் அனைவரையும் சகோதரராக ஏற்கும் ஒரே குடும்பம் என்ற உணர்வு உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திருக்குடும்பமே குழந்தை இயேசுவை காப்பாற்ற எகிப்திற்கு அகதியாகத் தப்பியோட வேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
இன்றையச் சில சூழல்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாட்டின் சித்ரவதைகளைத் தாங்கமுடியாமல் குடிபெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.