2011-01-15 13:14:50

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2011ம் ஆண்டு உலக இளையோர் தினத்தின் பாதுகாவலர்


சன.15,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2011ம் ஆண்டு உலக இளையோர் தினத்தின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படுவார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் இச்செய்தியை அறிவித்தார் மத்ரித் துணை ஆயர் செசார் ஃபிரான்கோ.

2011ம் ஆண்டு உலக இளையோர் தினம் வருகிற ஆகஸ்ட் 16 முதல் 21 வரை ஸ்பெயினின் மத்ரித்தில் நடைபெறவிருக்கிறது. இதன் பொது ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுபவர் ஆயர் ஃபிரான்கோ.

1985ம் ஆண்டில் முதல் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்பட்டது. இளையோர் மீது சிறப்புப் பாசம் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவ்வுலக தினத்தை அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.