சன.13,2011. சிங்கப்பூர் திருப்பீடத் தூதராக பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லியை (Leopoldo
Girelli) இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்தோனேசியாவுக்கானத்
திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் ஜிரெல்லி, மலேசியா, புருனெய் ஆகிய நாடுகளுக்கான
அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் வியட்நாம் நாட்டிற்கான பாப்பிறைப் பிரதிநிதியாகவும்
நியமிக்கப்பட்டுள்ளார்.1953ம் ஆண்டில் பிறந்த இத்தாலியரான பேராயர் ஜிரெல்லி, 1987ம் ஆண்டிலிருந்து
திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றி வருகிறார்.