கெய்ரோவுக்கருகே காப்டிக் ரீதி கிறிஸ்தவக் குழுவினர் தாக்கப்பட்டனர்
சன.12, 2010. திருப்பீடத்திற்கான எகிப்தின் தூதரை அந்நாட்டு அரசு மீண்டும் நாட்டுக்குத்
திரும்பச் சொல்லி அழைத்த அதே செவ்வாயன்று, கெய்ரோவுக்கு அருகே பணியில் இல்லாத Amer Abdel
Zaher Ashur என்ற காவல்துறை அதிகாரி காப்டிக் ரீதி கிறிஸ்தவக் குழு ஒன்றை நோக்கிச் சுட்டதில்
71 வயதான Fathi Said Ebeid சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவரது மனைவியும் மேலும்
நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.சீருடையில் இல்லாத காவல் துறை அதிகாரி தப்பிக்க முயன்றபோது,
கைது செய்யப்பட்டார். அவர் அந்தக் குழுவை நோக்கிச் சுட்டபோது, அல்லாவின் பெயரைச் சொன்னதாக
இச்சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.