2011-01-11 15:23:26

ஆஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தையின் நிதியுதவி.


சன 11, 2011. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் திருத்தந்தை அவர்களுக்கு உதவும் நோக்குடன் 50 ஆயிரம் டாலர்களையும் அனுப்பியுள்ளதாக ஆஸ்திரேலியாவிற்கான திருப்பீடத்தூதர் அறிவித்தார்.

திருத்தந்தை தன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு இஞ்ஞாயிறன்று கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தை வெளியிட்ட திருப்பீடத்தூதர் பேராயர் Guisseppe Lazzarotto, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைக் கவனிக்க 'கோர் ஊனும்' திருப்பீட அமைப்பு மூலம் திருத்தந்தை 50 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளதையும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.