அரசியல் லாபத்திற்காகவே சலுகைகள் என குறை கூறியுள்ளது தாய்லாந்து தலத்திருச்சபை.
சன.10,2011. குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவச மின்சாரம், குறைந்த விலையில் சமையல்
வாயு, தெரு வியாபாரிகளுக்கு மேலும் இடங்கள் என பல சலுகைகளைப் பிரதமர் Abhisit Vejjajiva
அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே எனினும், இதன் மூலம் உண்மையான பிரச்சினைகளுக்குத்
தீர்வு காணப்படவில்லை என குறை கூறியுள்ளனர் தாய்லாந்தின் கிறிஸ்தவத் தொழிலாளர்கள்.
தன்
அரசியல் இலாபத்திற்காகவே இத்தகையச் சலுகைகளைப் பிரதமர் அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டும்
கிறிஸ்தவத்தலைவர்கள், சரியான வரி வசூலிக்கும் திட்டம், ஊழலற்ற நிர்வாகம், வளர்ச்சியை
ஊக்குவித்தல் போன்றவைகள் மூலம் தாய்லாந்து மக்களுக்கு உதவி அவர்கள் தங்கள் சொந்த காலிலேயே
நிற்க அரசு வழி செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.