2011-01-08 14:44:54

இலங்கை காவல்துறையில் புதிதாக தமிழர்கள்


சன.08,2011. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே தடவையில் முந்நூறுக்கும் அதிகமான தமிழர்கள் காவல்துறையில் சேர்ந்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் 16 பெண்கள் உட்பட 336 தமிழ்ப் காவல்துறையினர் களுத்துறை காவல்துறை பள்ளியில் ஆறு மாத காலப் பயிற்சியை முடித்துக்கொண்டு இவ்வெள்ளியன்று வெளியேறிய நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

86,000 பேர் கொண்ட இலங்கை காவல்துறையில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் குறைவானத் தமிழர்களே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து ஐந்நூறு தமிழர்களைக் காவல்துறையில் சேர்க்க எண்ணம் கொண்டுள்ளதாக அத்துறையின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.