2011-01-06 15:27:24

இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்


சன.06,2011. இலங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என்று UNHCR என்ற ஐ நா வின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அப்படி வருபவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள இருப்பதாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்தது.

போருக்கு பிறகு 2010ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று இலங்கையில் இருக்கும் UNHCR அமைப்பின் ஜெனிஃபர் பகோனஸ் தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு கணிசமான அளவில் உயரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளை பொறுத்தமட்டில் அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் என்றும், அவர்கள் நிச்சயமாக நாடு திரும்புவார்கள் என்றும், தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதியர் மறுவாழ்வு அமைப்பின் தலைவரான சந்திரஹாசன் கருத்து வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.