2011-01-06 15:25:19

ஆங்லிக்கன் ஆயர்கள் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படுவதற்குத் தயாரித்து வருகின்றனர்


சன.06,2011. இங்கிலாந்தில் மூன்று முன்னாள் ஆங்லிக்கன் ஆயர்கள் இம்மாதம் 15ம் தேதி கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படுவதற்குத் தீவிரமானத் தயாரிப்புக்களில் தங்கள் ஈடுபடுத்தியுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இம்மூவரும் இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் புத்தாண்டு திருப்பலியில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தனர். இவர்கள், மூன்று ஆங்லிக்கன் அருட்சகோதரிகள் மற்றும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தனர்.

ஆங்லிக்கன் சபையினர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வகுத்துள்ள நடவடிக்கைகள், இன்னும் பலர் கத்தோலிக்கத்தில் சேருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன என்று இம்மூன்று ஆயர்களில் ஒருவரான ஆயர் John Broadhurst கூறினார்







All the contents on this site are copyrighted ©.