2011-01-05 15:31:59

வெளிநாட்டு இந்தியர்களுக்கான கருத்தரங்கம் சனவரி 7ல் தொடக்கம்


சன.05,2011. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான ஆண்டுக் கருத்தரங்கம் இவ்வெள்ளியன்று தில்லியில் தொடங்குகிறது.
இந்த ஆண்டு, கருத்தரங்கு மற்றும் அது தொடர்பான கண்காட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்குகளில் கலந்துகொள்கின்றனர். 51 நாடுகளில் இருந்து சுமார் 1500 வெளிநாட்டு இந்தியர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறர். நிறைவு நாளான சனவரி 9ம் தேதி இந்திய அரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசுகிறார்.மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, கபில் சிபல், கமல்நாத், குலாம் நபி ஆசாத் ஆகியோர் இக்கருத்தரங்கின் பல்வேறு அமர்வுகளில் உரையாற்றவுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.