கத்தோலிக்க அரசியல்வாதிகள் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் - சிட்னி
பேராயர்
சன.04,2011. கத்தோலிக்க அரசியல்வாதிகள் திருச்சபைப் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்
என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல் குறை கூறினார்.
ஆஸ்திரேலியாவில்
2011ம் ஆண்டில் கருணைக் கொலை, ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து
தீவிர விவாதங்கள் இடம் பெறுவுள்ளதையடுத்து கருத்துத் தெரிவித்த கர்தினால் பெல் இவ்வாறு
கூறினார்.
நாடாளுமன்றத்தில் அறநெறி விவகாரங்கள் குறித்த வாக்கெடுப்புகள் நடைபெறும்
போது கத்தோலிக்க அரசியல்வாதிகள் கிறிஸ்தவக் கண்ணோட்டங்களைப் புறக்கணிக்கின்றனர் என்று
கூறினார் அவர்.
Herald Sun என்ற ஞாயிறு வார இதழுக்குப் பேட்டியளித்த சிட்னி பேராயர்,
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு கிறிஸ்தவத்தின் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுவது
கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.