ஐவரி கோஸ்ட் நாட்டு மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கவலை.
ஜன 03, 2010. ஐவரி கோஸ்ட் நாட்டு அரசுத்தலைவர் தேர்தல் தொடர்புடைய மோதல்களில், மனித
உரிமை மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளை அடையாளம் கண்டு, அவைகளை அகற்ற தங்களால் இயன்ற அனைத்தையும்
ஆற்ற உள்ளதாக ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.
அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலக
மறுக்கும் Laurent Gbagboவின் ஆதரவாளர்களால் எண்ணற்ற எதிர்க்கட்சியினர் கொல்லப்பட்டிருக்கலாம்
என்ற குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க
முயன்று வரும் ஐ.நா. அவை, பல்வேறு தடைகளை எதிர்நோக்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐவரி
கோஸ்ட் நாட்டின் அமைதிக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்ற உள்ளதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ள
அதே வேளை, நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைகள்
இடம்பெறவேண்டும் என எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.