2010-12-30 14:56:28

சீனாவில் அழகியப் பளிங்கினாலான பத்தடி உயரமுள்ள இயேசுவின் திருஇருதய திரு உருவம்


டிச.30, 2010. அழகியப் பளிங்கினாலான பத்தடி உயரமுள்ள இயேசுவின் திருஇருதய திருஉருவம் சீனாவில் ஒரு பேராலய வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

Lan Zhou மறைமாவட்டப் பேராலயத்தின் முகப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரு உருவத்தின் கீழ் மத்தேயு நற்செய்தியின் அருள்வாக்கான “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

திரு உருவத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் புனித பிரான்சிஸ் அசிசியின் அமைதிக்கான செபமும் பொறிக்கப்பட்டுள்ளது.

விசுவாசிகள் எப்போதும் இயேசுவின் திரு இருதயப் பக்தியிலும் செபத்திலும் வளர வேண்டும் என்பதை நினைவுபடுத்தவும் சீன நாட்டில் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை எடுத்துரைக்க வேண்டும் என்பதைக் கூறவும் இந்தத் திரு உருவம் அமைக்கப்பட்டுள்ளதென Lan Zhou மறைமாவட்டத்தின் ஆயர் Han Zhi Hai கூறினார்.








All the contents on this site are copyrighted ©.