இயற்கைப் பேரிடர்களால் இலங்கை கிறிஸ்தவர்களின் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பாதிப்பு
டிச.29, 2010. இயற்கைப் பேரிடர்களாலும், சாலை விபத்துக்களாலும் இலங்கை வாழ் கிறிஸ்தவர்களின்
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இவ்வாண்டு பெரிதும் பாதிக்கப்பட்டன.
அண்மையில் இலங்கையில்
பெய்த கனமழை, மற்றும் பெரும் வெள்ளத்தால் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லத்தீவு
ஆகிய பகுதிகளில் வாழும் 210,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்புவில் உள்ள
காரித்தாஸ் அமைப்பு கூறியது.
இப்பகுதிகளில் மக்களின் துயர் துடைக்க அரசு எந்த
முயற்சியும் எடுக்கவில்லை என்று தமிழ் தேசிய முன்னணியின் பாராளு மன்ற உறுப்பினர் சுமந்திரன்
கூறினார். கிறிஸ்மஸ் விழாவையொட்டி 100 கைதிகளை அரசு விடுவித்துள்ளது மகிழ்வைத் தருகிறதெனினும்,
இன்னும் 7000க்கும் அதிகமானோர் சிறைகளில் இருப்பது வேதனை தரும் செய்தி என்று கொழும்பு
கத்தோலிக்க சிறைப்பணியின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை Hilary Peiris கூறினார்.