2010-12-28 15:33:15

திருத்தந்தை - இளையோர் தங்களையே பிறருக்குக் கொடையாக வழங்கும் பண்பில் வளர அழைப்பு


டிச.28,2010. தங்களையே பிறருக்குக் கொடையாக வழங்கும் பண்பில் இளையோர் வளருமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு ரோட்டர்டாமில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள 33வது ஐரோப்பிய இளையோர் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இன்றைய உலகில் காணப்படும் தன்னலப் போக்கின் மாயையை எதிர்த்து வாழவும் பிறர்நலப் பண்பில் வளரவும் இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய இளையோர், இந்தக் கூட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களைத் தங்களது சமூகங்களில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் இடம்பெறவிருக்கின்ற உலக கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் இளையோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பது பற்றியும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் நாளான இச்சனிக்கிழமை நிறைவடையும் இந்த ஐரோப்பிய இளையோர் கூட்டத்தில் சுமார் முப்பதாயிரம் இளையோர் கலந்து கொள்கின்றனர்








All the contents on this site are copyrighted ©.