ஆண்டின் இறுதி நாட்கள் இவை. கணக்கு வழக்குகளைத் தீர்க்கும் காலம் இது. கணக்குகள்
பலவகை. புத்தகங்களில் எழுதப்படும் கணக்குகளுக்கும், வாழ்வின் கணக்குகளுக்கும் வேறுபாடுகள்
அதிகம் உண்டு. புத்தகக் கணக்குகளில் எண்கள் முக்கியம். வாழ்வின் கணக்குகளில் எண்ணங்கள்
முக்கியம். எண்கள், எண்ணங்கள் என்பதை வார்த்தை விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. எண்ணங்கள்
வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஓர் உண்மை. கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல் என்று பல வழிகளில் கணக்கெழுதுகிறோம். வரவுக் கணக்கில் கூட்டலும்,
பெருக்கலும் அதிகமானால் மகிழ்கிறோம். வாழ்விலும் நல்லெண்ணங்களின் கூட்டலும், பெருக்கலும்
மகிழ்வைத் தரும். நல்லவை கூடுதலாக வேண்டும். நல்லவை பெருக வேண்டும். நல்லதல்லவை கழிய
வேண்டும்.2010ம் ஆண்டின் கணக்குகளும், வழக்குகளும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நலம் தரும்
வகையில் தீர்க்கப்பட வாழ்த்துகிறோம்.