2010-12-28 15:37:16

இலங்கையில் ஏழைக் கைதிகளுக்கு உதவுவதற்கு கொழும்பு கத்தோலிக்கச் சிறைப்பணி அமைப்பு முயற்சி


டிச.28,2010. இலங்கையில் சிறையில் இருக்கும் ஏழைக் கைதிகளுக்கு உதவுவதற்கென நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது கொழும்பு கத்தோலிக்கச் சிறைப்பணி அமைப்பு.

குறைந்த அளவு அபராதத் தொகையைக் கட்டமுடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் இருப்பதாகக் கூறும் ஆசியச் செய்தி நிறுவனம், ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரையிலான அபராதங்களைச் செலுத்த முடியாமல் ஏறக்குறைய ஏழாயிரம் கைதிகள் இருப்பதாகவும் தெரிவித்தது.

தெருவில் சண்டை போட்டது, சட்டத்துக்குப் புறம்பே மதுபானம் விற்றது போன்ற சிறிய குற்றங்களுக்காக இவர்கள் சிறையில் இருக்கின்றனர்.

இந்தக் கைதிகள் குறித்து கவலை கொண்டுள்ள திருச்சபை இந்நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவும், 2011ம் ஆண்டின் முதல் பாதியில் இக்கைதிகளில் சிலர் விடுதலை அடைவர் எனவும் கொழும்பு சிறைப்பணி அமைப்பின் ஆன்மீகக் குரு ஹில்லரி பீரிஸ் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.