2010-12-27 15:06:11

ஏழை மக்களுக்கு உதவ வேண்டியது கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட கடமை என்கிறார் அயர்லாந்து கர்தினால்


டிச 27, 2010. இந்தக் கிறிஸ்மஸ் குளிர் காலத்தில் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வரும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டியது கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட கடமையாகிறது என அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால் Sean Brady.

அயர்லாந்து மக்கள் 2010ம் ஆண்டில் பெரும் கடன்களாலும் குறைந்த வருமானங்களாலும் துன்பங்களை அனுபவித்து வந்ததாக குறிப்பிட்ட கர்தினால், இவ்வாண்டின் கடுங்குளிரால் மக்களின் நலவாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வருங்காலமும் சவால் நிறைந்ததாக உள்ள நிலையில், ஒருவர் மற்றவருக்கு ஊக்கத்தை வழங்கவேண்டியது இன்றியமையாதது ஆகின்றது என்றார் கர்தினால். எதிர்மறை எண்ணங்களால் ஒரு சமூகம் மூழ்கிப் போய்விடாமல் இருக்க ஒருவர் மற்றவருக்கான ஊக்க வார்த்தைகள் இன்றியமையாதவை எனவும் கூறினார் அயர்லாந்து கர்தினால் Brady.








All the contents on this site are copyrighted ©.