2010-12-23 15:35:31

திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வழங்கிய கிறிஸ்மஸ் உரை


டிச.23, 2010. கிறிஸ்துவை இன்றும் ஆபத்துகளிலிருந்து காப்பதற்கு தேவை உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு விழாவாக கிறிஸ்மஸைக் காண வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.

உரோமையிலுள்ள Bambino Gesu என்ற குழந்தைகள் மருத்துவமனைக்கு அண்மையில் சென்றிருந்த கர்தினால் பெர்தோனே அங்கு நிகழ்ந்த ஒரு விழாவில் இவ்வாறு கூறினார்.

குழந்தை இயேசுவின் பெயரைத் தாங்கியுள்ள இம்மருத்துவ மனையில் உங்களுடன் கூடியிருப்பது தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தருகிறது என்றுரைத்த கர்தினால், குழந்தைகள் முகத்தில், சிறப்பாக, துயருறும் குழந்தைகள் முகத்தில் இருக்கும் சிரிப்பில் பெத்லகேம் குழந்தையின் பிரசன்னத்தை உணரலாம் என்று கூறினார்.

ஒளி வெள்ளத்தில் நமது இல்லங்களையும், பொது இடங்களையும் மூழ்க வைக்கும் நாம், ஒளியாக வரும் கிறிஸ்துவை ஆழ்ந்த தியானத்திலும் காண முயல வேண்டும் என்று வலியுறுத்தினார் கர்தினால் பெர்தோனே.








All the contents on this site are copyrighted ©.