2010-12-22 15:25:51

ஒரிசாவில் ஓர் இந்து தீவிரவாத இயக்கம் கிறிஸ்மஸ் நாளன்று பேரணி நடத்தவிருப்பதாக அச்சுறுத்தல்


டிச.22,2010. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் Kui Samaj என்ற இந்து தீவிரவாத இயக்கம் கிறிஸ்மஸ் நாளன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேரணி நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அப்பகுதி கிறிஸ்தவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உலகளாவிய இந்தியக் கிறிஸ்தவர்கள் அவை கூறியது.

2007ம் ஆண்டில் கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம் பெற்ற வன்முறையில் கிறிஸ்மஸ் தினத்தன்று காங்கேஸ்வர் மாலிக் என்ற பூர்வீக இன இந்து கொல்லப்பட்டதை நினைவு கூரும் விதமாக இந்தப் பேரணியை நடத்தவிருப்பதாக குய் சமாஜ் இயக்கத்தின் தலைவர் Lambodar Kanhar கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.