இந்தோனேசியாவின் போகோர் மாகாணத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்குத் தடை
டிச.22,2010. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள Bogor மாகாணத்தில் கிறிஸ்மஸ் திருப்பலியும்
பிற கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள்
வழிபாட்டுத் தலத்தைக் கொண்டிருப்பதற்குச் சரியான அனுமதி பெறவில்லை என்று கூறி கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்களைத் தடை செய்வதாக அதிகாரிகள் கூறினர்.