2010-12-22 15:26:39

இந்தோனேசியக் கத்தோலிக்க அறிவாளர்கள் நாட்டு நலனுக்காகத் தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள்


டிச.22,2010. இந்தோனேசியாவில் சமூகநலத்தையும் தேசிய ஒன்றிப்பையும் மேம்படுத்துவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்க அறிவாளர்கள் தெளிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் Poernomo Yusgiantoro கேட்டுள்ளார்.

நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட அனைத்து நிலைகளிலும் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை வகுக்குமாறு வலியுறுத்தினார் Yusgiantoro.

ISKA என்ற இந்த இந்தோனேசிய கத்தோலிக்க அறிவாளர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கத்தோலிக்கரான அமைச்சர் Yusgiantoro இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

1958ம் ஆண்டு மே 22ம் தேதி உருவாக்கப்பட்ட இக்கழகம் தேசிய அளவில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.