இன்றைய நவீன உலகின் அதிவிரைவுப் போக்கு, ஹாங்காங் கத்தோலிக்கர்களின் விசுவாச வளர்ச்சிக்கு
பெரும் தடைக்கல்.
டிச 21, 2010. இன்றைய நவீன உலகின் அதிவிரைவுப் போக்கானது, ஹாங்காங் கத்தோலிக்கர்களின்
விசுவாச வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதாக அண்மையில் அங்கு எடுக்கப்பட்ட ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் 15 வயதிற்கு மேற்பட்ட கத்தோலிக்கர்களிடையே நடத்தப்பட்ட
இந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் விவிலியத்தை அடிக்கடி வாசிப்பதில்லை
எனவும், பலர் திருப்பலிக்குச் செல்லாமல் இருப்பதாகவும் இதற்கெல்லாம் காரணம் நேரமின்மையே
என அவர்கள் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
வரும் 2011ம் ஆண்டை பொதுநிலையினருக்கான
ஆண்டாக சிறப்பிக்க உள்ள ஹாங்காங் மறைமாவட்டம் இவ்வாய்வின் முடிவுகளின் துணையுடன் இளைஞர்களுக்கான
மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளது.