2010-12-18 15:11:26

பிலிப்பைன்சில் கிறிஸ்மஸ் போர் நிறுத்தம் மட்டுமல்ல, நிலையான அமைதியும் தேவை - ஆயர்கள்


டிச.18,2010.. பிலிப்பைன்சில் அரசும் கம்யூனிசப் புரட்சியாளர்களும் கிறிஸ்மஸ் காலப் போர் நிறுத்தத்தை இவ்வியாழனன்று அறிவித்துள்ள வேளை, இதையும் கடந்து நாட்டில் நிலையான அமைதி நிலவும் வழிகளை இவ்விரு தரப்பினரும் சிந்திக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலால் ஏற்பட்டுள்ள இடர்நிறைந்த சூழலில் நாடு தொடர்ந்து வாழ முடியாது என்று மத்திய பிலிப்பைன்ஸ் மாநில ஆயர்கள் கவலை தெரிவித்தனர்.
வருகிற ஜனவரி 3ம் தேதி வரை இந்த இடைக்காலப் போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்தப் போர் நிறுத்தம் நாட்டில் நிலைத்த அமைதி ஏற்பட வழி அமைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் ஆயர் ஹோசே அத்வின்குலா.







All the contents on this site are copyrighted ©.