2010-12-18 15:07:17

கோட்டபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்-ஆயர் ஜோசப் கரிக்காசேரி


டிச.18,2010. இந்தியாவின் கோட்டபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் ஜோசப் காரிக்கச்சேரி(Joseph Karikkassery) அவர்களை இச்சனிக்கிழமை நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரள மாநிலத்தின் கோட்டபுரம் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் ஜோசப் காரிக்கச்சேரி இதுவரை வெராப்பொலி மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றியவர்.
1946ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி கேரளாவின் Karthedom என்ற ஊரில் பிறந்த ஆயர் காரிக்கச்சேரி, 1973ல் குருவானார். 2006ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி வெராப்பொலி மறைமாவட்டத்தின் துணை ஆயராக இவர் நியமிக்கப்பட்டார்.
மேலும், இச்சனிக்கிழமை காலை வத்திக்கான் நூலகத்தையும் பார்வையிட்டார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.