2010-12-17 15:49:11

தென் சூடானில் மக்களாட்சிக்கு ஆதரவாக செபம்


டிச.17,2010. தென் சூடானில் மக்களாட்சிக்கு ஆதரவாக அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செப முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நத்தலினா மாபோ என்ற பெண் Wau நகர் வீதிகளில் மெழுகுதிரியுடன் செபித்துக் கொண்டு முன்செல்ல, அவரின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் செபித்துக் கொண்டு சென்று மக்களாட்சிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

“அமைதிச் சுடர்” என்ற தலைப்புடன் இடம் பெற்று வரும் இச்செப நடவடிக்கை, அந்நாட்டில் அமைதியான முறையில் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடக்க வேண்டுமென்ற சர்வதேச கிறிஸ்தவர்களின் முயற்சிகளில் ஒன்றாகும்.

தென் சூடான் தனி நாடாக மாறுவது குறித்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற ஜனவரி 9ம் தேதி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.