2010-12-17 15:50:46

தமிழகத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு


டிச.17,2010. தமிழகத்தில், "வாழ்ந்து காட்டுவோம்' என்ற திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக, துணை முதல்வரை சந்தித்த உலக வங்கிக் குழுவினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உலக வங்கி உதவியுடன் 717 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும், "வாழ்ந்து காட்டுவோம்' என்ற திட்டம் குறித்து ஆய்வு செய்ய, உலக வங்கிக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

இக்குழுவினர், துணை முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறினர்.

இந்தச் சந்திப்பில், உலகவங்கிக் குழுவின் தலைவர் நடாஷா கூறும்போது, "தமிழகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதால், உலகவங்கி கூடுதலாக 50 வட்டாரங்களில் உள்ள 1661 ஊராட்சிகளில், இத்திட்டத்தை 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்த அனுமதித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது' என்றார்.








All the contents on this site are copyrighted ©.