குடும்பக்கட்டுப்பாடு குறித்த நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் அரசு திருச்சபையோடு சேர்ந்து
செயல்பட இசைவு
டிச.15,2010. பிலிப்பைன்சில் குடும்பக்கட்டுப்பாடு குறித்த வழிகாட்டிகளை வழங்குவதற்கு
அந்நாட்டு அரசும் கத்தோலிக்கத் திருச்சபையும் சேர்ந்து செயல்பட இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கும் திருச்சபைத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டது.
பலவிதமானக் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்த தகவல்களை
விநியோகிப்பது உட்பட பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின்
பொதுச் செயலர் ஆயர் Juanito Figura கூறினார்.
இவ்விவகாரங்களில் மக்களின் மனச்சான்றைக்
களங்கப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடாது என்று உறுதி கூறப்பட்டதாகவும் ஆயர்
தெரிவித்தார்.