இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் காணாமற்போனவர்கள் குறித்து நீதி கேட்டு போராட்டம்
டிச.15,2010. இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப்போரின் போது காணாமற் போனவர்களின் பெற்றோர்
மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இணைந்து கடந்த
வாரத்தில் கொழும்புவில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
கணிப்புப்படி, இலங்கை உள்நாட்டுப்போரின் போது பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர்.
“முப்பது
ஆண்டுகளுக்குப் பின்னர் மனித உரிமைகள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இவ்வூர்வலத்தில்,
“எங்கே எங்கள் உறவுகள், தாய்மார்கள், தந்தையர், மனைவிகள், கணவன்கள் குழந்தைகள்?” என்று
எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் தாங்கிச் சென்றனர்