2010-12-11 14:36:56

இஸ்ரேலில் காட்டுத் தீயில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்


டிச.11,2010. இஸ்ரேலில் நான்கு நாட்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளவேளை, அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்துக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையேயான நிரந்தரப் பணிக்குழுவின் நிறையமர்வு கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட வத்திக்கான், திருத்தந்தையின் இச்செபம் குறித்தும் தெரிவித்தது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இவ்வாரத்தில் நடத்திய இக்கூட்டம் குறித்தத் தனது பாராட்டுதல்களை வெளியிட்ட திருப்பீடம், இக்கூட்டத்தில் 1993ம் ஆண்டின் உடன்பாடுகள் முடிவுக்கு வருவதற்கான முயற்சிகள் பற்றி பேசப்பட்டன என்று கூறியது.

இப்பணிக்குழுவின் அடுத்த கூட்டம் வருகிற ஜூன் 16ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.