டிச.10,2010: லித்துவேனிய அரசுத் தலைவர் Dalia Grybauskaite இவ்வெள்ளிக் கிழமை திருத்தந்தை
16ம் பெனடிக்டை வத்திக்கானில் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர்
தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Dalia Grybauskaite.லித்துவேனியாவின் வாழ்விலும்
வரலாற்றிலும் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு, அந்நாட்டிற்கும் திருப்பீடத்துக்கும்
இடையேயான நல்லுறவுகள், தற்போதைய ஐரோப்பிய பொருளாதார மற்றும் சமூக நிலைமை, குறிப்பாக,
குடும்பங்கள் மற்றும் இளையோரின் நிலைமை போன்றவை இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன என்று
திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.