டிச.10,2010. டிசம்பர் 10 அனைத்துலக மனித உரிமைகள் நாள். இந்தத் தினத்தை வைத்து, இதற்கு
முன்வரும் ஞாயிறை தலித் விடுதலை ஞாயிறாக இந்தியக் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். இவ்வாண்டின்
இத்தினம் டிசம்பர் 5, கடந்த ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அருள்திரு
காஸ்மன் ஆரோக்யராஜ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். இவர் இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர்
ஆணைக்குழுவின் செயலர். புதுடெல்லியிலுள்ள இந்திய ஆயர் பேரவை அலுவலகத்தில் இவர் பணியாற்றுகின்றார்.