தென் சூடானின் சுதந்திரம், நாட்டின் அமைதிக்கான உடனடி தீர்வு தராது என்கிறார் ஆயர்
டிச 07, 2010. தென் சூடானின் சுதந்திரம் குறித்த ஜனவரி மாத மக்கள் கருத்து வாக்கெடுப்பு
வழி, நாட்டின் அமைதிக்கான உடனடித் தீர்வு கிட்டுவது எளிதல்ல என உரைத்துள்ளார் அந்நாட்டு
ஆயர் எத்வார்தோ ஹீபொரோ குஸ்ஸாலா.
சூடானின் தென்பகுதி சுதந்திரமடைவதன் மூலம் அதிகாரத்தையும்
அளவற்ற செல்வத்தையும் பெறலாம் என அரசியல்வாதிகள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி
மக்களோ தேனும் பாலும் ஓடும் என நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற கவலையை வெளியிட்டார் ஆயர்.
ஒரு
நாடு சுதந்திரம் அடையும்போது அது கொணரும் பொறுப்புணர்வுகள் குறித்து உணர்ந்து அவைகளை
ஏற்றுக்கொள்ள பொதுமக்களும் அரசியல்வாதிகளும் தயராக இருக்கும் வண்ணம் அவர்களைத் தயாரிப்பதே
தலத்திருச்சபையின் தற்போதைய முதற்கடமையாக உள்ளது என மேலும் கூறினார் ஆயர் குஸ்ஸாலா