2010-12-07 15:12:37

ஆஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கான கிறிஸ்தவ சபைகளின் பணி.


டிச.07,2010. ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதியின்றி நுழைந்ததால் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை, கிறிஸ்தவ சபைக் கட்டிடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை துவக்க உள்ளன அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் ப்ரெஸ்பிட்டீரியன் கிறிஸ்தவ சபைகள்.

கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டத்திற்கு முன், அகதிக் குடும்பங்களைத் தடுப்பு காவல் முகாம்களில் இருந்து அரசு அனுமதியோடு எடுத்து வந்து கிறிஸ்தவசபைகளுக்குச் சொந்தமான கட்டிடங்களில் குடியமர்த்த உள்ளது குறித்து மெல்பர்ன் உயர் மறைமாவட்டமும் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டவர்கள், தடுப்புக்காவல் முகாம்களில் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிறிஸ்தவசபைகள், அவர்களை குடியமர்த்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.