பாகிஸ்தானின் சிறுபான்மை மதங்களுக்கான அமைச்சருக்குக் கொலை மிரட்டல்கள்
டிச.06, 2010. பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்கள் கொணரப்பட வேண்டும்
என உழைத்து வரும் அந்நாட்டு சிறுபான்மை மதங்களுக்கான அமைச்சர் Shabhaz Bhattiஐக் கொலை
செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன பாகிஸ்தான் இஸ்லாம் தீவிரவாத குழுக்கள்.
கத்தோலிக்கரான
பாகிஸ்தான் அமைச்சர் Bhatti, ஏற்கனவே பலமுறை அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும்
தீவிரவாதக் குழுக்களிடம் இருந்து பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டுக்கு
உள்படுத்தப்பட்டுள்ள Asia Bibiயை விடுவிப்பதற்கும், தேவநிந்தனைச் சட்டத்தில் திருத்தங்களைக்
கொணரவும் உழைத்து வரும் அமைச்சர் Bhatti அமைதி காக்கவில்லையெனில், அவர் வெட்டிக் கொல்லப்படுவார்
என்று ஏற்கனவே தீவிரவாத அமைப்புக்கள் வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்துள்ளன.
இம்மிரட்டல்கள்
குறித்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் அவைத் தலைவர் Mehdi Hasan பாகிஸ்தானில்
சகிப்பற்ற தன்மை அதிகரித்து வருவதாகவும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் ஆதரவை நாடும்
அரசியல் கட்சிகள் இது குறித்து பாராமுகமாய் இருப்பதாகவும் தன் கவலையைத் தெரிவித்தார்.