கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்ட முன்வரைவை ஸ்காட்லாந்து பாராளுமன்றம் நிராகரிப்பு
டிச.06, 2010. கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்ட முன்வரைவை ஸ்காட்லாந்து பாராளுமன்றம்
நிராகரித்துள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் அந்நாட்டு பேராயர் Mario Conti.
தற்கொலைகளை
அனுமதிக்க வழிவகுக்கும் இச்சட்டப் பரிந்துரை ஸ்காட்லாந்து பாராளு மன்றத்தில் 85 வாக்குகள்
எதிராகவும், 16 வாக்குகள் ஆதரவாகவும் பெற்றதால் நிராகரிக்கப்பட்டது.
அப்பாவி உயிர்களை
எடுப்பதற்கோ அல்லது உயிரிழப்பிற்கு உதவுவதோ அடிப்படையிலேயே தவறானது என்பதை ஸ்காட்லாந்து
பாராளு மன்றமும் தன் செயல் மூலம் பறைசாற்றியுள்ளது குறித்து மகிழ்வதாக உரைத்தார் பேராயர்
Conti.