2010-12-04 15:24:27

ஈராக் பேராயர் லூயிஸ் சாகோவுக்கு அகில உலக அமைதி விருது


டிச.04, 2010. Pax Christi யின் 2010ம் ஆண்டுக்கான அகில உலக அமைதி விருது ஈராக்கின் கிர்குக் உயர்மறைமாவட்டத்தின் கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாகோவுக்கு வழங்கப்படுகிறது.

ஈராக்கில் சிறுபான்மையினராய் இருக்கும் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காகவும், அந்நாட்டில் ஒப்புரவு, மதநல்லுணர்வு இவற்றை வளர்க்கப் பாடுபட்டு வருவதற்காகவும் பேராயர் சாகோவுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதென்று Pax Christi அமைப்பு கூறியுள்ளது.

டிசம்பர் 8ம் தேதி பாரிசில் பிரெஞ்ச் ஆயர் பேரவை கூடும் சமயத்தில் இவ்விருது வழங்கும் விழா நடைபெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.