டிச.03, 2010. இத்தாலியின் Naples உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Michele
Giordano இவ்வியாழன் இரவு Naplesல் இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். கர்தினால்
Giordanoவின் மரணத்தையொட்டி Naples உயர் மறைமாவட்ட விசுவாசிகளுக்கும், கர்தினாலின் உறவினர்களுக்கும்
தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். திருச்சபையில் கர்தினால் Giordano ஆற்றியுள்ள மாபெரும் சேவைகளைத் தன் தந்திச்
செய்தியில் பாராட்டியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் ஆன்ம சாந்திக்கானத் தன் செபங்களையும்
தெரிவித்துள்ளார்.1930ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பிறந்த கர்தினால் Giordano, 1972ம்
ஆண்டு ஆயாராகத் திருநிலை படுத்தப்பட்டு, 1988ம் ஆண்டு ஜூன் மாதம் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.