2010-12-03 15:37:40

இல்லங்களில் பணி செய்வோரும் பதிய சட்டத்தில் சேர்க்கப்பட இந்தியத் தலத்திருச்சபை போராட்டம்


டிச.03, 2010. பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் குறித்து வரையறுக்கப்படவுள்ள சட்டத்தில், இல்லங்களில் பணி செய்வோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியத் தலத்திருச்சபை அரசைப் பல வழிகளிலும் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கையை அரசு தன் விவாதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உழைப்பிற்கான இந்திய ஆயர் பேரவையின் பணிக்குழு இந்தியாவில் உள்ள பல்வேறு உழைப்பாளிகள் அமைப்புக்களுடன் சேர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புது டில்லியில் வீட்டு வேலை செய்வோர் அமைப்பு அண்மையில் ஒரு ஊர்வலம் நடத்தியது. இவ்வியாழனன்று இந்தூரில் அருள்சகோதரிகள் தலைமையில் மற்றொரு ஊர்வலம் நடத்தப்பட்டது.இந்தியாவில் 2005ம் ஆண்டு அரசு எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி 47 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீட்டு வேலைகள் செய்து வருவதாகவும், அவர்களில் 90 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.