1552 – இயேசுசபை மறைபோதகர் புனித பிரான்சிஸ் சவேரியார் இறந்தார் 1795 ல் நவீன அஞ்சல்
சேவையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த ரோலண்ட் ஹில்லும் 1884 ல் இந்தியாவின்
முதலாவது குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தும் பிறந்தனர். 1903 - சர் ஹென்றி
பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார். 1904 - வியாழனின் ஹிமாலியா
என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1971 – இந்தியா,
கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. 1973 - வியாழனின்
முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. 1984 -
போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள்
உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000
பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். 1997
- நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்தத் தடை ஒப்பந்தத்தில்
121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன. அமெரிக்கா, இரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில்
கையெழுத்திடவில்லை. டிசம்பர் 3 புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா மற்றும் உலக
மாற்றுத் திறனாளிகள் நாள்