2010-11-30 15:59:59

சிறைக் கைதிகளின் நலனுக்கான அயர்லாந்து தலத்திருச்சபையின் அழைப்பு


நவ.30, 2010. கைதிகளின் அதிக எண்ணிக்கை நெருக்கடி, போதைப்பொருள் மற்றும் வன்முறைகளால் அயர்லாந்து சிறைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு சிறைகளில் பணிபுரியும் குருக்கள்.

வயது முதிர்ந்த சிறைக்கைதிகள் போதிய படுக்கை வசதியின்றி துன்புறுவதாகவும், போதை பழக்கமில்லாத இளங்கைதிகள் சிறை வந்து திரும்பிச் செல்லும்போது அப்பழக்கத்துடன் வெளியேறுவதாகவும் அயர்லாந்து ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய குறைபாடுகள் குறித்து அயர்லாந்து சிறை அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அயர்லாந்தின் 17 சிறைகளில் 27 குருக்கள், துறவறத்தார் மற்றும் கத்தோலிக்கப் பொதுநிலையினர் ஆன்மீகப் பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.