ஒரு சமயம் ஒரு வியாபாரி தனது வியாபாரத்தில் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தார். எப்பொழுதும்
ஒருவிதப் பயத்துடன் காணப்பட்டார். இரவில் செல்லும் போது விசில் அடித்துக் கொண்டே செல்வார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றொரு வயதான வியாபாரி அவருக்கு மூன்று வரிகளில் ஒரு செபத்தைச்
சொல்லிக் கொடுத்தார். அந்தச் செபத்தை அவர் சொல்லத் தொடங்கிய பின்னர் தனது வியாபாரத்திலும்
வாழ்விலும் பல அற்புதங்களைக் கண்டார். அவரது விற்பனையும் படிப்படியாகத் தங்குதடையின்றி
மேலே மேலேச் சென்று கொண்டிருந்தது. அவர் சொன்ன செபம் இதோ-
நான் எப்பொழுதும்
கடவுளால் வழிநடத்தப்படுகிறேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். நான் எப்பொழுதும் சரியானப்
பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிநடத்தப்படுகிறேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன்.
பாதையே
இல்லாத இடங்களிலும் கடவுள் ஒரு பாதையை அமைக்கிறார் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன்.