2010-11-25 15:16:35

டாக்கா உயர்மறைமாவட்டத்திற்கான புதிய வாரிசுரிமைப் பேராயர் நியமனம்


நவ.25, 2010. பங்களாதேசின் டாக்கா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமைப் பேராயராக அந்நாட்டின் சிட்டகாங் மறைமாவட்ட ஆயர் பேட்ரிக் டி ரொசாரியோவை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.டாக்காவின் வாரிசுரிமைப் பேராயராக இவ்வியாழனன்று நியமிக்கப்பட்டுள்ள ஆயர் பேட்ரிக் டி ரொசாரியோ, 1943ம் ஆண்டு பிறந்து 1972ல் குருவாகவும் 1990ல் பங்களாதேஷின் ராஜ்ஷஹி மறைமாவட்டத்தின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1995ம் ஆண்டு முதல் சிட்டகாங்கின் ஆயராக பணியாற்றி வந்துள்ளார் இவர்.







All the contents on this site are copyrighted ©.