இலங்கையில் உடல் ஊனம் காரணமாக 8088 படைவீரர்கள் ஓய்வு
நவ.24,2010. இலங்கையில் போரின்போது ஏற்பட்ட உடல் ஊனம் காரணமாக 8088 படைவீரர்கள் ஓய்வு
பெற்றுக் கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தைச் சேர்ந்த 7337 பேரும், கடற்படையைச் சேர்ந்த 450 பேரும், விமானப்
படையைச் சேர்ந்த 113 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 188 பேரும் இவ்வாறு ஓய்வு பெற்றுக்
கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு ஓய்வு பெற்றவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும்பொருட்டு
தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக குணவர்தன தெரிவித்துள்ளார்