2010-11-22 16:09:33

கர்தினால் உர்பானோ நவரெத்தே கோர்த்தெஸ் இறைபதம் சேர்ந்தார்


நவ.22, 2010. இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கர்தினால் உர்பானோ நவரெத்தே கோர்த்தெஸ் இத்திங்கள் காலை உரோம் நகரில் காலமானார்.

இஸ்பெயினின் கமெரெனா தெ லா சியேரா எனுமிடத்தில் 1920ம் ஆண்டு மே மாதம் பிறந்த கர்தினால் நவரெத்தே கோர்த்தெஸ் 1952ம் ஆண்டு இயேசு சபையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் நகரின் புகழ்வாய்ந்த கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தின் அதிபராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இவரின் 87ம் வயதில் 2007ம் ஆண்டு தற்போதய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவரைக் கர்தினாலாக உயர்த்தினார். 90 வயதாகும் கர்தினால் நவரெத்தே கோர்த்தெஸ், இத்திங்கள் காலை உரோம் நகரின் இயேசு சபையினரின் புனித கனிசியூஸ் இல்லத்தில் இறைபதம் சேர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.